மகளிர் தினம் – பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாளும் ராண்ட் மாஸ்டர் வைஷாலி..!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஒருநாள் மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிவு ஒன்றை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
‘வணக்கம்’ என்று தொடங்கும் அந்த பதிவில், “நாம் வைஷாலி (@chessvaishali). மகளிர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைத்தளப் பக்கத்தை கையகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் செஸ் விளையாடுகிறேன். மேலும் பல போட்டிகளில் நமது அன்பான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று வைஷாலி பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து தனது செஸ் பயணம் குறித்த தகவல்களையும் வைஷாலி பகிர்ந்துள்ளார். அதில், “நான் ஜூன் 21-ஆம் தேதி பிறந்தேன். அது தற்செயலாக இப்போது சர்வதேச யோகா தினமாக பிரபலமாக உள்ளது. நான் 6 வயதிலிருந்தே செஸ் விளையாடி வருகிறேன்!
செஸ் விளையாடுவது எனக்கு ஒரு கற்றல், சிலிர்ப்பூட்டும் மற்றும் பலனளிக்கும் பயணமாக இருந்து வருகிறது. இது ஒலிம்பியாட் உள்பட பல போட்டிகளின் வெற்றிகளில் பிரதிபலிக்கிறது. ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது.”
“அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கும் ஒரு செய்தியை நான் கொடுக்க விரும்புகிறேன். தடைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். உங்கள் ஆர்வம் உங்கள் வெற்றிக்கு சக்தி அளிக்கும்.
Vanakkam!
I am @chessvaishali and I am thrilled to be taking over our PM Thiru @narendramodi Ji’s social media properties and that too on #WomensDay. As many of you would know, I play chess and I feel very proud to be representing our beloved country in many tournaments. pic.twitter.com/LlYTmqE2MQ
— Narendra Modi (@narendramodi) March 8, 2025
பெண்கள் தங்கள் கனவுகளைப் பின்பற்றவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் துறையில் சாதிக்கவும், அவற்றில் இருக்கும் தடைகளை உடைக்கவும் நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவர்களால் முடியும் என்று எனக்குத் தெரியும்!” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 23 வயதான கிராண்ட்மாஸ்டர், தனது FIDE தரவரிசையை மேலும் மேம்படுத்தி நாட்டை பெருமைப்படுத்த விரும்புவதாகக் கூறினார். “செஸ் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்துள்ளது. நான் விரும்பும் விளையாட்டுக்கு மேலும் பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அதே உணர்வில், இளம் பெண்கள் தாங்கள் விரும்பும் எந்த விளையாட்டையும் தொடர வேண்டும் என்று நான் சொல்ல விரும்புகிறேன். விளையாட்டு சிறந்த ஆசிரியர்களில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.
பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் பெண்களை ஆதரிக்கவும், அவர்களின் திறன்களை நம்பவும் வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். “பெற்றோர்களும், உடன்பிறந்தவர்களும் பெண்களை ஆதரிக்க வேண்டும்.
அவர்களின் திறன்களை நம்புங்கள், அவர்கள் அற்புதங்களைச் செய்வார்கள். என் வாழ்க்கையில், ஆதரவான இருந்தது என் பெற்றோர்களான ரமேஷ்பாபு, நாகலட்சுமி. என் சகோதரர் பிரக்ஞானந்தாவும் (@rpraggnachess), நானும் ஒரு நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம். சிறந்த பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் கிடைத்தது எனக்கு பாக்கியம்.”
“விஸ்வநாதன் ஆனந்த் (@vishy64theking) அவர்களின் விளையாட்டால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இன்றைய இந்தியா பெண் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆதரவை வழங்குகிறது என்று நான் உணர்கிறேன். இது மிகவும் ஊக்கமளிக்கிறது.
பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதில் இருந்து பயிற்சி வரை அவர்களுக்கு போதுமான விளையாட்டு வெளிப்பாட்டை வழங்குவது வரை, இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் அளப்பரியது,” என்று அவரது பதிவில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...