சிபிஎஸ்இ பள்ளியை திருமாவளவனும் நடத்துகிறார் – அண்ணாமலை அட்டாக்

அரசியல்

சிபிஎஸ்இ பள்ளியை திருமாவளவனும் நடத்துகிறார் – அண்ணாமலை அட்டாக்

சிபிஎஸ்இ பள்ளியை திருமாவளவனும் நடத்துகிறார் –  அண்ணாமலை அட்டாக்

சென்னை வேளச்சேரியில் செயல்படும் சிபிஎஸ்சி பள்ளி ஒன்றின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான் என்றும், அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், திருமாவளவன் தான்.

அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave your comments here...