பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் – தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 71,000 பேர் பயிற்சி..!

இந்தியா

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் – தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 71,000 பேர் பயிற்சி..!

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் – தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 71,000 பேர் பயிற்சி..!

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 71,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 71,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி  கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) தனது முதன்மைத் திட்டமான பிரதமரின்  திறன் மேம்பாட்டுத் திட்டத்தை 2015 முதல் செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய வேலைவாய்ப்பு மூலம் சிறந்த வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலைக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிற்சி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும், முந்தையக் கற்றலை அங்கீகரித்தல் மூலம் திறனை மேம்படுத்துதல் மற்றும் மறுதிறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள் குறுகிய கால பயிற்சி  கூறுகளில் இத்திட்டத்தின் முதல் மூன்று பதிப்புகளில் கண்காணிக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-22 முதல் 2023-24 வரை) பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் மாவட்ட வாரியான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் இந்த அமைச்சகத்திடம் இல்லை.

தொழில்துறை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழ்நாட்டின் 32 ஐடிஐ-கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன:-

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி தலைமை இயக்குநரகம், உலக வங்கி உதவியுடன் மத்திய அரசின் திட்டமாக இருந்த தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது. தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பழகுநர் பயிற்சிகள் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகளின் பொருத்தம் மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் காலம் 2017-2024 (மே வரை) ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் 500 ஐடிஐ கள் (இதில் 467 அரசு மற்றும் 33 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அடங்கும்) ஆய்வகம், உபகரணங்கள் மற்றும் கருவிகளை மேம்படுத்துவதன் மூலம் பயிற்சியின் தொழில்துறை பொருத்தத்தை மேலும் மேம்படுத்த  தேர்ந்தெடுக்கப்பட்டன.

இவற்றில் தமிழ்நாட்டில் இருந்து 29 அரசு ஐடிஐகளும், 3 தனியார் ஐடிஐகளும், புதுச்சேரியில் இருந்து 2 அரசு ஐடிஐகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மொத்தம் 90 தொழில் தொகுப்புகள்
தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி முன்முயற்சி  மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இவற்றில் தமிழ்நாட்டின் தொழில் தொகுப்புகளின் எண்ணிக்கை 15 ஆகும்.

Leave your comments here...