நவீனமயமாகும் இந்திய விமானப் படை – 114 அதிநவீன போர் விமானம் வாங்க மத்திய அரசு திட்டம்..!

இந்திய விமானப் படையை நவீனமாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு 114 அதி நவீன போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப் படையை நவீனமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விமான படையின் உபகரணங்களை மேம்படுத்தும் முயற்சி 2007ம் ஆண்டு துவங்கியது. அந்த வகையில், இந்த ஆண்டு 114 போர் விமானங்களை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி உள்ளது. இது நாட்டின் போர் விமானங்களின் இருப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா தனது விமானப்படையை வேகமாக விரிவுபடுத்தும் நேரத்தில், இது நல்ல முடிவு. இந்திய விமானப் படைக்கு இந்த திட்டம் மிகவும் முக்கியமானது என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணர் லக்ஷ்மன் பெஹெரா கூறியதாவது: சீனர்கள் நவீன போர் விமானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தானும் சீனாவின் ஆதரவைப் பெறுகின்றது. அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் போர் விமானங்கள் பற்றாக்குறையாக உள்ளன, என்றார்.
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியாவிற்கு ரஷ்யா பல தசாப்தங்களாக முக்கிய ஆயுதங்களை வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவிற்கு சொந்தமான முக்கிய போர் விமானங்களின், சுகோய் சு-30எம்.கே.ஐ., எச்.ஏ.எல்., தேஜாஸ் முக்கிய ஒன்றாக திகழ்ந்து வருகின்றன. இந்தியாவிற்கு எப்.,35 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...