ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் – காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் மிரட்டல்..!

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் – காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் மிரட்டல்..!

ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் – காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் மிரட்டல்..!

நவம்பர் 1 முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தானி தீவிரவாதி பன்னுன் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கேட்கும் பிரிவினைவாதிகள், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர். இவர்கள், இந்தியாவுக்கு எதிராக பேசுவதையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் அந்நாட்டு அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதனால் இவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிப்போகிறது.

குறிப்பாக, கனடாவில் சீக்கியர்கள் ஓட்டு வங்கியாக மாறியுள்ள நிலையில், அவர்களது ஓட்டுக்களை பெறுவதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இந்நிலையில்தான், கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளான். நவம்பர் 1 முதல் 19ம் வரையில் பயணிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என்ற அவனது மிரட்டல் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சீக்கியர்களின் இனப்படுகொலையின் 40ம் ஆண்டு நினைவு தினம் அடுத்த வாரம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் மிரட்டல்;-

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்துக்கு வேறுபெயரிடப்படும், நவம்பர் 19-ம் தேதி விமான நிலையம் மூடப்படும் என்றும் வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருந்தார். அன்றைய தினம் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அதேபோல் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அவரைக் கொல்ல சதி நடப்பதாக செய்தி வெளியான நிலையில், டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்போ இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தான் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தாண்டு குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் கவுரவ் யாதவை கொலை செய்யப் போவதகாக மிரட்டல் விடுத்திருந்தார். ஜன.26-ம் தேதி பகவந்த் மானை கொல்ல தீவிரவாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

சீக்கியர்களுக்கு தனி இறையாண்மை கொண்ட நாடு வேண்டும் என்று கோரி வரும் எஸ்எஃப்ஜெ என்ற அமைப்பை வழிநடத்தி வரும் பன்னுன், தேசதுரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு ஓராண்டுக்கு முன்பு, தேசவிரோதம் மற்றும் நாசகார செயல்களில் ஈடுப்பட்டதாக கூறி எஸ்எஃப்ஜெ அமைப்பை இந்தியா தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...