தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு,..!

இந்தியா

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு,..!

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு,..!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை நரிமன் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்தில் இன்று காலை 10.30 மணி முதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. மாலை 3.30 மணியளவில் அளவில் அவரது உடல் வோர்லி மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமித் ஷா கலந்து கொள்கிறார்.

Leave your comments here...