காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்… தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை – ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா..!

அரசியல்

காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்… தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை – ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா..!

காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்… தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை – ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா..!

யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர், முதல்முறையாக காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக்கு கட்சி 40க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து  தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 50 இடங்களை கைப்பற்ற உள்ள நிலையில், தேமாக துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தல் முடிவுகள்:இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 4.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்தக் கட்சி 42 இடங்களை கைப்பற்றுகிறது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

முதல்வராகிறார் உமர் அப்துல்லா: –

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியுடன் மக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

காஷ்மீரில், காவல்துறை ராஜ்ஜியம் இல்லை என்றும், இனி, மக்களின் ராஜ்ஜியம்தான் நடைபெறும் என்றும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஓமர் அப்துல்லா முதலமைச்சராவார் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட முடிவை (சட்டப்பிரிவு 370 நீக்கம்) மக்கள் ஏற்கவில்லை என்பதும் இந்த தேர்தலில் தெளிவாகி இருக்கிறது என குறிப்பிட்டார். காஷ்மீரில், காவல்துறை ராஜ்ஜியம் இல்லை என்றும், இனி, மக்களின் ராஜ்ஜியம்தான் நடைபெறும் என்றும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஓமர் அப்துல்லா முதலமைச்சராவார் என்றும் அவர் கூறினார்.

62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தத்தில் 29 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. மெகபூபா முஃப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை, இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது; முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் இந்துக்கள் என்பதும் இண்டியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...