சமூகநீதி பேசுகிறார்களே தவிர… பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

தமிழகம்

சமூகநீதி பேசுகிறார்களே தவிர… பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

சமூகநீதி பேசுகிறார்களே தவிர… பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற காந்தியவாதிகளை சிறப்பித்த ஆளுநர், காந்தி மண்டபத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களையும் சிறப்பித்து, பல்வேறு மாநில அளவிலான விருதுகளை வென்றவர்களுக்கு விருதுகளை ஆளுநர் வழங்கினார். காதி கிராமோத்யோக் பவன் காதி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் தூய்மை மற்றும் கடைசி ஆண் மற்றும் பெண் மீது அக்கறை கொண்ட மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத கொள்கைகளை வலியுறுத்தினார். ஒரு நிலையான மற்றும் அமைதியான உலகை வளர்ப்பதற்கு இந்தக் கொள்கைகள் முன்பை விட இன்றைக்கு மிகவும் முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை என்று தெரிவித்தார். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் பட்டியலின மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள், குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டு வெட்கப்படுவதாக தெரிவித்தார்.

Leave your comments here...