செந்தில் பாலாஜியின் 58-வது முறை காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தமிழகம்

செந்தில் பாலாஜியின் 58-வது முறை காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

செந்தில் பாலாஜியின் 58-வது முறை காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58 வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தநிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...