ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பிரச்சாரம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கண்டனம்..!

தமிழகம்

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பிரச்சாரம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கண்டனம்..!

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பிரச்சாரம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கண்டனம்..!

கோவா :- ஈஷா யோகா மையத்திற்கு  தி.க, கம்யூனிஸ்டு, மே 17, ஆகிய. அமைப்புகள்  அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஈஷா யோகா மையத்திற்கு எதிராக திமுகவில் ஊடுருவியுள்ள தி.க, கம்யூனிஸ்டு,மே 17, ஆகிய. அமைப்புகள் திமுக ஆட்சியைப் பயன்படுத்தி அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அத்துமீறி ஈஷா யோகா மையத்திற்குள் உள்ளே நுழைய முயற்சி செய்கிறார்கள். ஒருதலை பட்சமாக ஈஷா யோகா மைய நிர்வாகிகள் மீது ராமகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடருகின்றனர்.

தற்பொழுது சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஹசன் மூலம் கேள்வி எழுப்பி ஈஷா யோக மையம் குறித்து சர்ச்சைகளை உருவாக்குகின்றனர்.!

இத்தகைய செயலால் ஈஷா யோக மையத்தை ஒடுக்க முயற்சி நடக்கிறது. இத்தகய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாபெரும் மக்கள் இயக்கத்தை நடத்துவோம்.

தமிழக வனவாசி மக்களுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும், நதிநீர் பாதுகாப்பு,யோகக் கலையை பரப்புதல், மரம் நடுதல், விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பாடு பாதுகாப்பு, மண்வள பாதுகாப்பு, இப்படி பல வகைகளில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் நன்மைகள் பல செய்து வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் குறித்தும் ஈஷா யோகா மையம் குறித்தும் பரப்பப்படும் பொய்களை முறியடிப்போம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave your comments here...